Lyrics :
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... . உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... . ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... . வாழ்வென்பதோ கீதம்.. வளர்;கின்றதோ நாதம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் . நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம். . . சுகமே.. இனியெல்லாம். . . சுகமே.![]()