4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.![]()
பொருள்: விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.
வணக்கம். என் தமிழ் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
நீங்கள் தமிழ்ப் படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் உள்ளவரா? அதிலும் பழைய பாடல்கள் விரும்பிக் கேட்கும் வழக்கம் உள்ளவராயிருந்தால் இந்தப் பக்கங்களை மகிழ்ச்சியுடன் புரட்டிப் பார்க்கலாம். எனக்குப் பிடித்த என்னிடம் இருக்கின்ற பழைய, புதிய பாடல்களை இந்த வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கின்றேன்.